Posts

Showing posts from September, 2017
https://youtu.be/4fyd-IGlCjI

மாறுகிறது மெர்சல் படத்தின் டைட்டில்! புதுப்பெயர் என்ன தெரியுமா?

Image
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மெர்சல் படம் தற்போது இணையத்தில் தனது டீசர் மூலம் பல சாதனைகளை செய்தது. இதனிடையே மெர்சலாகிட்டேன் என்ற தலைப்பு பல வருடங்கள் முன்பே தான் பதிவு செய்துவிட்டதாகவும், விஜய் நடிக்கும் மெர்சல் படத்தினால் தன் படத்திற்கு பாதிப்பு வரும் எனவும் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மெர்சல் என்னும் பெயரை விளம்பரம் செய்ய தற்காலிக தடை விதித்தது. தடைப்படி அக் – 3ம் தேதி வரை மெர்சல் என்னும் பெயரை படக்குழு எந்த விளம்பரத்திற்கும் பயன்படுத்த முடியாது. இவ்வழக்கின் ஒத்திவைக்கப்பட்ட விசாரணை மீண்டும் தொடர்ந்து இந்த தடை நீடிக்குமானால் படத்தை வெளியிடுவதில் பெரும் சிக்கல் வரும், இதனால் அவசர அவசரமாக மாற்று பெயரை யோசித்து வருகின்றனராம் படக்குழுவினர். தற்போதைக்கு ஆளப்போறான் தமிழன் என்பதை தலைப்பாக வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். எனினும் விசாரணை முடிவு தங்களுக்கு சாதகமாக வரும்பட்சத்தில் மெர்சல் என்ற பெயரையே தொடர்வதாக முடிவு செய்துள்ளனர். மெர்சலா? ஆளப்போறான் தமிழனா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அட்லீக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய அஜித் ரசிகர்கள்! டென்ஷன் ஆன அட்லீ.. அப்படி என்ன பரிசு?

Image
அட்லீ தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இயக்குனர் இவர் குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகர்களை வைத்தது படம் இயக்க தொடங்கினார் இவர் இயக்கிய முதல் படம் ராஜாராணி இந்தப்படம் அட்லீக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.  ‘தெறி’ யை தொடர்ந்து ’மெர்சல்’ மூலம் விஜயுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார் இயக்குநர் அட்லி. விஜய் மூன்று வேடத்தில் நடிக்கும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இயக்குநர் அட்லியின் பிறந்தநாளான இன்று (செப்.21) ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளது.இந்த நிலையில், இயக்குநர் அட்லிக்கு பல்வேறு தரப்பினர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் அஜித் ரசிகர்கள் கூட அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள் ஆனால், அஜித்  ரசிகர்களின் பிறந்தநள் வாழ்த்தால் மகிழ்ச்சிக்கு அடைவதற்கு பதில் ரொம்பவே சோகமடைந்துள்ளார். காரணம், அட்லி இயக்கும் படக்கள் அனைத்தும் பிற படங்களின் காப்பி என்பதை, பல விதமான மீம்ஸ்களை கிரியேட் பண்ணி அதன் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறா

துப்பறிவாளன் விமர்சனம்! இந்த படத்துல இருக்கற ஒரே அப்பாவி பிரசன்னா

Image
Thupparivaalan Movie Review Cast : Vishal, Prasanna, K Bhagyaraj, Andrea Jeremiah, Anu Emmanuel, Vijay Rai, Simran, Jaya Prakash, John Vijay & Others Music : Arrol Corelli Studio : Vishal Film Factory Producer : Vishal Written & Directed by Mysskin 1st Half – Good 2nd Half – Above Average Winner: Cinematography Karthik Venkatraman, Music Composer Arrol Corelli Runner up: Vishal for Producer, Mysskin for his trademark scenes.. Loser: Prasanna (நல்ல நடிகர் தயவு செஞ்சி இதுமாதிரி டம்மி ரோல் வேணாம்). இவரே ஒரு ஹீரோ. கடைசில விஷாலுக்கு கட்ட அவுத்து விடுறதுலாம் ஓவர்.

ஜோதிகா மேல் வருத்தத்தில் கார்த்தி! எதற்கு தெரியுமா?

Image
நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் புரிந்தது அனைவரும் அறிந்ததே. திருமணத்திற்கு பிறகு நடிக்காமலிருந்த ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார். அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், நல்ல படம் என்று பலராலும் பேசப்பட்டது. தற்போது பெண்களை பற்றிய திரைப்படமான மகளிர் மட்டும் படத்தில் நடித்துள்ளார். அவரிடம் தங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டதும், “என் கணவர் சூர்யாவிற்கு பிறகு தற்போது எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி” என்று முக நூல் லைவ்வில் ஒரு கேள்விக்கு பதிலளித்திருந்தார். சூர்யாவிற்கு பிறகு தன் பெயரை சொல்லாமல் விஜய் சேதுபதி பெயரை சொன்னதால் கொழுந்தன் கார்த்தி அண்ணி மீது வருத்தத்தில் உள்ளாராம், இந்த விஷயத்தை பற்றி தன் மனைவியிடமும், சூர்யாவிடமும் மீண்டும் மீண்டும் புலம்பி தள்ளுகிறாராம் கார்த்தி.

பெல்ஜியம் : மாணவிகளே பாலியல் தொழில் செய்து படிக்கலாம் , சம்பாதிக்கலாம்!

Image
Kalai Marx  : கல்லூரி மாணவிகளே! படிப்பதற்கு பணம் இல்லையா? பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதிக்கலாம்! பெல்ஜியத்தில் ஒரு விபச்சார தரகு நிறுவனத்தின் விளம்பரம். This is the glory of Capitalism. A street advertisement in Belgium calling the female students to earn money in prostitution. "Hey students! 0,- student loan? Date with a Sugar daddy" "மேற்குலகின் மகிமை பொருந்திய முதலாளித்துவ நாகரிகம்." மேற்கத்திய நாடுகளில் கல்வியை தனியார்மயமாக்கியதன் விளைவாக, ஏழைகள் படிக்க முடியாத அளவிற்கு கல்விக் கட்டணம் உயர்ந்து வருகின்றது. எல்லோருக்கும் கல்விக் கடன் கிடைப்பதுமில்லை. இந்த நிறுவனம் சாட்டாக வைத்து, மாணவிகளை பணக்கார ஆண்களுடன் பாலியல் தொழில் செய்வதற்கு அழைக்கிறது.

கமல் பிக் பாஸ்-கு ஓ.கே. சொன்னதற்கான காரணம் இதுதானா??

Image
கமல் பிக் பாஸ்-கு ஓ.கே. சொன்னதற்கான காரணம் இதுதானா?? இந்தியாவில், கிடைக்கும் பொது தளங்களை பிரச்சார மேடையாக்கி அதன் மூலம் பெருவாரியான மக்களிடம் கருத்துப் பிரச்சாரத்தை கொண்டு செல்லும் உத்தியைத் தொடங்கியவர்கள் இடது சாரிகள். இந்திய சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்ட இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் கம்யூனிச, சோசலிச கருத்துக்களை பிரச்சாரம் மூலம் கொண்டு சென்றனர். காங்கிரஸ் கட்சிக்குள் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு எதிராக வலதுசாரி தத்துவார்த்தம் தலைதூக்கிய போதெல்லாம் அதனை இவர்கள் முறியடித்தனர். சுதந்திர போராட்ட தலைவர்கள், தொண்டர்கள் அடுத்த கட்ட போராட்டம் பற்றி கூடி முடிவெடுக்க இயலாத அசாதாரணமான அடக்கு முறை நிலவிய போது மும்பையில் விநாயக சதுர்த்தி விழாவை நடத்தி அதில் சுதந்திர போராட்ட வீரர்கள் கூடி விவாதித்து முடிவெடுக்க வழிவகுத்தார் பாலகங்காதர திலகர். இந்தியாவில் அவசர நிலையை இந்திரா காந்தி கொண்டு வந்த போது பேச்சு உரிமை, எழுத்து சுதந்திரம் தடை செய்யப்பட்ட நிலையில் தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு திருமண விழாக்களை பயன்படுத்தினார் தி மு க தலைவர் கருணாநிதி. தி மு க தல

உலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்! அதிர்ச்சியில் கட்சிகள்?

Image
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கமல், விஜய். இந்நிலையில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் கமல் அரசை பற்றி சரமாரியாக விமர்சனம் வைத்துவருகிறார். தற்போது, கமல் தான் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என்றும் அது மக்களுக்கான கட்சியாக இருக்கும் என கூறிவருகிறார். இந்நிலையில், சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு கமல் அளித்த பேட்டியில் விஜய் என்னோடு அரசியலில் ஈடுபட வேண்டும் என அழைப்புவிடுதுள்ளர்.

ஆண்களுக்கு சில அழகு குறிப்புகள்!

Image
ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். இதற்கேற்ப நாம் உடை மட்டும் அழகாக அணிந்தால் போதாது. நாமும் பொலிவுடன் இருக்க வேண்டும். வெயிற்காலங்களில் முகம் கருப்பாகி நமது அழகை கெடுத்து விடுகின்றது, இதை போக்கி முகம் அழகுடன் பொலிவுடன் இருக்க ஆண்களுக்கான அழகு குறிப்புக்கள் சில: வெயிலில் சுற்றித் திரிந்து வந்தவுடன் தினமும் பசும் பாலின் ஆடையை எடுத்து முகம் முழுவதும் நன்கு அழுத்தி தேய்த்து ஊற வைக்கவும், பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசவும். முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும், கரும்புள்ளிகள் மாயமாக மறைந்துவிடும். ஆண்களுக்கான எளிய முறையிலான பேஸ் பேக்: ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர் ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம். வாழைப்பழ பேக்: வாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதற்கு நன்கு கனிந்த

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Image
பூமிக்கு அடியிலிருந்து விளைந்து வரும் கேரட்டில் விட்டமின் எ, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகிய பல சத்துக்கள் காணப்படுகின்றன. இப்படி அனைத்து சத்துக்களையும் அடக்கியிருக்கும் இந்த கேரட்டை சாப்பிட்டால் என்ன அதிசயங்கள் உடம்பில் நடக்கும் என்பதனை பார்கலாம். 1) கேரட் சாப்பிடுவதால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். எனவே, அதனை வேகவைத்து அதனுடன் முட்டை மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. 2) உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சைப் பழம் மற்றும் தேன் கலந்து சாப்பிட வேண்டும். 3) ஜீரணக் கோளாறுகள் மற்றும் உடல் எலும்புகள் உறுதியாக கேரட் உடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். 4) உணவில் அடிக்கடி கேரட்டை சேர்த்துக் கொள்வதனால், முதுமையில் ஏற்படும் கால்சியம் சத்துக் குறைபாடு, தலைமுடி உதிர்வு, எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். 5) பெண்களுக்கு மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் உதிரப்போக்கு காரணமாக உடம்பில் விட்டமின் இழ

கேரளத்து தேவதைகளின் அழகு ரகசியங்கள்

Image
இந்தியாவின் கேரள மாநிலத்துப் பெண்கள் ஒருவிதமான அழகு என்று தான் கூற வேண்டும். பொதுவாக, கேரளத்து பெண்கள் என்றாலே நீளமான கருங்கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் ஆகிய கருத்துகள் தான் நமக்கு ஞாபகம் வரும். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அவர்களின் அழகு பராமரிப்புதான். இத்துடன் இன்னொரு காரணம் என்னவென்று பார்த்தால் அந்த மாநிலம் இயற்கை வளங்களால் சூழப்பட்டும் உள்ளது. நீளமான கருங்கூந்தல் : கேரளத்துப் பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள். இவர்கள் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடிபட்டுப்போன்று பொலிவாக இருக்கின்றது. இத்துடன், ஷாம்புவிற்குப் பதிலாக சீகைக்காயை அரைத்து, தலைக்கு வைத்து பயன்படுத்துகின்றார்கள். பொடுகு வராமல் இருப்பதற்கு, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள். மென்மையான சருமம்: சருமம் மென்மையாக இருப்பதற்கு காரணம், மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது ம

News update: மெர்சல் டைட்டில் முடக்கம்! பின்னணியில் கருணாஸ் எம்...

News update: மெர்சல் டைட்டில் முடக்கம்! பின்னணியில் கருணாஸ் எம்... : கடந்த இருபத்தி நான்கு மணி நேரமாக தமிழகமெங்கும் தலைவலி மாத்திரை அதிகளவுக்கு விற்பனை ஆகியிருந்தால், அதற்கு முழு முதல் காரணமாக அமைந்திருப்பது...

மெர்சல் டைட்டில் முடக்கம்! பின்னணியில் கருணாஸ் எம்.எல்.ஏ?

Image
கடந்த இருபத்தி நான்கு மணி நேரமாக தமிழகமெங்கும் தலைவலி மாத்திரை அதிகளவுக்கு விற்பனை ஆகியிருந்தால், அதற்கு முழு முதல் காரணமாக அமைந்திருப்பது, மெர்சல் டைட்டிலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையாகதான் இருக்க முடியும். விஜய் ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரம், ஸ்மூத்தாக முடியுமா? ஹார்டு ஆகிதான் கலையுமா? டவுட்… டவுட்… ஆனால் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்தால், பெரிய பெரிய அதிர்ச்சிகள் வரிசை கட்டி நிற்கும் போலிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் ஏ.ஆர்.ராஜேந்திரன் என்பவர், ‘மெரசாலாயிட்டேன்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை துவங்குவதாக திட்டமிட்டிருந்ததாக கூறியிருக்கிறார். விஜய் படத்திற்கு மெர்சல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் தன்னால் இப்போது படத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குமுறியிருக்கிறார். இந்த தலைப்பை பற்றிய விபரங்களை தேட ஆரம்பித்த நமக்கு, ஒரு சினிமா விளம்பர போஸ்டர் மட்டும் கண்ணில் சிக்கியது. அதில் நடிகர் கருணாசுக்கு சொந்தமான கென் மீடியா நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ‘கென் மீடியா கருணாஸ் பிரசன்ஸ்’ என்று கொட்டை எழுத்தில் உருவாக

என்னை சாகடித்து 75 நாள் ஆஸ்பத்திரியில் வைத்திருந்தாங்க..! ஜெ. ஆவி பேசியதாக சாமியார் பரபரப்பு பேட்டி!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் வந்தார். அவர் தன்னிடம் ஜெயலலிதாவின் ஆவி பேசியதாகவும், ஓ.பி.எஸ்சை சந்திக்க வேண்டும் என்றும் அனுமதிக்காக காத்திருந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் விசாரித்தபோது, கண்களை மூடியபடி ஜெயலலிதா ஆவி தன் மீது இறங்கி இருப்பதாகவும், அந்த ஆவி பேசுவது போலவும் பேசினார். அவர் கூறியதாவது:- நான் (ஜெயலலிதா) இறந்துதான் 75 நாட்களாக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தேன்.  ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும்.  அவர் என் அன்புக்கு பாத்தியமானவர். அவருக்கு உறுதுணையாக இருப்பேன். சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள்.  அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். இந்த தகவல் நக்கீரனில் வெளிவந்துள்ளது.

தமிழ் இல்லாமல் ஒரு மொழியா..? உலக நாடுகளையே உதறிவிட்டு, கொரியா ஏறிநின்று எதிர்க்க துணிந்தது எப்படி..?

இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நிகழும் மாநிலமாக இருப்பது தமிழ்நாடு. ஓரிடத்தில் உரிமை மீறப்படுகிறது என்றால் அங்கே ஒரு போராட்டம் வெடிக்கும். பரிணாம வளர்ச்சியில் உலகிற்கே முன்னோடியான இனம் இது. சம்பிரதாயம் என்ற வார்த்தைக்குள் சயின்ஸை வைத்த பூமி இது. சடங்குகள் வேறு, சம்பிரதாயங்கள் வேறு. மூட நம்பிக்கைகள் சடங்குகள் வரிசையில் வரும். அது இடைச்சொறுகலாக வந்தது. ஆனால் தமிழர்களின் பண்பாடு தொன்று தொட்டு வருவது. அறிவியலை தவிர வேறு எந்த பின்னணி காரணங்களும் இருக்காது. இன்றைக்கு இருக்கும் பல உலக மொழிகளுக்கு வேர் மொழியானது தமிழ். காலத்தின் கட்டாயம் நிரூபிக்க பல ஆதாரங்களை தேட வேண்டி இருக்கிறது. தற்போது கொரியா உலகையே எதிர்த்து போராடும் அளவிற்கு தற்சார்பு உடைய நாடாக மாறி இருக்கிறது என்றால், அங்கு தமிழ் கலாச்சாரமும் ஒரு வகையில் வேரூன்றி இருக்கிறது. நம்கிம் எனும் கொரியர் ஏறத்தாழ ஐந்தாயிரம் தமிழ்ச்சொற்கள் கொரிய மொழியில் உள்ளதாக கோவை செம்மொழி மாநாட்டில் தமதாய்வுக் கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார். அவரைத் தமிழ் கற்கத் தூண்டியது எது என்பதை அவரே விளக்குகின்றார். கனடாவில் கொரிய மொழி ஆசிரியராக அவர்