ஜோதிகா மேல் வருத்தத்தில் கார்த்தி! எதற்கு தெரியுமா?

நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் புரிந்தது அனைவரும் அறிந்ததே. திருமணத்திற்கு பிறகு நடிக்காமலிருந்த ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார்.
அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், நல்ல படம் என்று பலராலும் பேசப்பட்டது. தற்போது பெண்களை பற்றிய திரைப்படமான மகளிர் மட்டும் படத்தில் நடித்துள்ளார்.
அவரிடம் தங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டதும், “என் கணவர் சூர்யாவிற்கு பிறகு தற்போது எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி” என்று முக நூல் லைவ்வில் ஒரு கேள்விக்கு பதிலளித்திருந்தார்.
சூர்யாவிற்கு பிறகு தன் பெயரை சொல்லாமல் விஜய் சேதுபதி பெயரை சொன்னதால் கொழுந்தன் கார்த்தி அண்ணி மீது வருத்தத்தில் உள்ளாராம், இந்த விஷயத்தை பற்றி தன் மனைவியிடமும், சூர்யாவிடமும் மீண்டும் மீண்டும் புலம்பி தள்ளுகிறாராம் கார்த்தி.

Comments

Popular posts from this blog

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டை தலைநிமிர செய்தவர் நரேந்திர மோடி பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா புகழாரம்