இளைஞர்களே அரசியலுக்கு வாருங்கள் : சகாயம் ஐஏஎஸ் அழைப்பு TNN | Updated Jul 9, 2017, 07:07 AM IST AAA
தஞ்சை : இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சகாயம் ஐஏஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகத்தை தாரக மந்திரமாக கொண்டு இயங்கிவருபவர் சகாயம் ஐஏஎஸ் இவருடைய நேர்மையான செயல்பாடு காரணமாக இளைஞர்களின் ரோல் மாடலாக திகழ்கிறார். தற்போது இவர் இளைஞர்களே அரசியலுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் சகாயம் ஐ.ஏ.எஸ் கூறும் போது," இந்த சமூகத்தை நேசிக்கக்கூடிய தலைவர்களை கொண்டு வர இளைஞர்களால் மட்டும் முடியும். இளைஞர்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும் .
நேர்மையான சமூகத்தை உருவாக்குவதன் மூலம் அரசியலில் நேர்மையான தலைமையை உருவாக்க முடியும் " என்று கூறினார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் சகாயம் ஐ.ஏ.எஸ் கூறும் போது," இந்த சமூகத்தை நேசிக்கக்கூடிய தலைவர்களை கொண்டு வர இளைஞர்களால் மட்டும் முடியும். இளைஞர்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும் .
நேர்மையான சமூகத்தை உருவாக்குவதன் மூலம் அரசியலில் நேர்மையான தலைமையை உருவாக்க முடியும் " என்று கூறினார்.
Comments
Post a Comment