🔥🔥🔥 *வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்...!* *”இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா..”* கதிராமங்கலத்திற்கு ஆதரவாக மதுரை சௌராஷ்ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! #கதிராமங்கலம்

ஜூன் 30ஆம் தேதி, கதிராமங்கலம் பந்தநல்லூர் சாலையில் தனியார் நிலத்தில் போடப்பட்டிருந்த எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் வர வேண்டுமெனக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். குழாயை சரி செய்ய வந்த ஓ.என்.ஜி.சி அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என அரசும் ஓ.என்.ஜி.சியும் சொல்கின்றன.இதற்கிடையில் கதிராமங்கலத்தில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் ஒரு சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் கதிராமங்கலம் விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் இன்று திங்கட்கிழமை கொண்டு வரப்பட்டுள்ள கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை கூறினார்.
மேலும் தமிழக காவல்துறையினரால் சிறிய அளவிலான தடியடி மட்டுமே நடத்தப்பட்டதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்கார்களில் சிலர் கல் வீச்சில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வைக்கோல் போரை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். 

Comments

Popular posts from this blog

மெர்சல் டைட்டில் முடக்கம்! பின்னணியில் கருணாஸ் எம்.எல்.ஏ?

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Bhahubali 2 movie reviews ...